திருமணமான 6 மாதத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!

340

சென்னையில் திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்த 27 வயதான அம்புஜ் கத்துட்யா என்பவர், சாலையில் இடிந்து கிடந்த கட்டட சிமென்ட் கற்களில் சிக்கியுள்ளார்.

இதனால் நிலைத்தடுமாறி விழுந்தவர், பின்னால் வந்த பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கினார். கண் இமைக்கும் நேரத்தில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இறந்துபோன அம்புஜ் கத்துட்யாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் அஞ்சலி (25) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் புளியந்தோப்பு ஸ்டிபன்சன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த அம்புஜ் கத்துட்யா, பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுவந்துள்ளார்.

அப்போதுதான் அவர் விபத்தில் சிக்கியுள்ளார். அம்புஜ் இறந்த தகவலையறிந்த அஞ்சலியும் அவரின் உறவினர்களும் கதறி அழுதுள்ளனர்.