இலங்கையில் வன்முறை வெடிக்கும் அபாயம் : தீவிர பாதுகாப்பில் இராணுவம்!!

276

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எந்த நேரத்தில் வன்முறை வெடிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கு சிறப்பு அதிரடி படையினர் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றில் தொடர்ந்தும் குழப்ப நிலை ஏற்படுகின்றமையால் அமைச்சுக்களுக்கு, முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆதரவாளர்கள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு உதவியாக இராணுவத்தினரையும் தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைத்தால் உடனடியாக இராணுவத்தை ஈடுபடுத்துவதற்கு உத்தரவு கிடைத்துள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இரவு முதல் 30 அரச அமைச்சுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நிறைவேற்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லதிப் தெரிவித்துள்ளார்.

அமைச்சிற்கு முன்னால் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், குறித்த அமைச்சின் செயலாளர்களின் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-