வவுனியாவில் நடைபெற்ற தொழில் சந்தை ஆரம்ப நிகழ்வு!!

354


தேசிய இளைஞர் சேவை மன்றமும் தொழில் வழிகாட்டல் ஆலோசனை நிலையமும் வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய மாபெரும் தொழில் சந்தை இன்று 27ம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை 09 மணிமுதல் 02 மணிவரை குருமன்காடு கலைமகள் மைதானத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மேலதிக உதவிப் பணிப்பாளர் சிசிர செனவிரட்ண தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனிபா அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்பு அதிதிகளாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராஜா, வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் ஜானக, மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.



கௌரவ அதிதிகளாக NAITA பணிப்பாளர், சமூர்த்தி உத்தியோகத்தர் ரமேஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்வின் ஒழுங்கமைப்பு பணிகளினை வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ், வவுனியா தெற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அஜித் சந்திரசேன, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் ஆகியோர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.