வவனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு!!

427

வவனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் வாசிப்புமாத பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பிரதேசசபையில் நடைபெற்றது.

சபையின் தலைவர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. முதல் நிகழ்வாக போரில் உயிரிழந்த மாவீரர்களிற்கு இருநிமிட அகவணக்கம் செலுத்தபட்டது.

பிரதேசசபையால் நடாத்தபட்ட வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கும், ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், முன்பள்ளி மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் வவுனியாவின் மூத்த கலைஞரான தமிழ்மணி அகளங்கனின் இலக்கியப் பணியை பாராட்டி கௌரவிக்கபட்டிருந்ததுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ரி.லிங்கநாதன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் கா.உதயராசா, மாவட்டமேலதிக அரசஅதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராஜா, ஏனைய பிரதேச சபைகளின் தலைவர்களான ச.தணிகாசலம், ஆ.அந்தோணி, பிரதேசசபையின் ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.