கொடிய விஷப்பாம்பை காட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை!!

340


 

இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை



சீனாவில் கொடிய விஷப்பாம்பை காட்டி அச்சுறுத்தி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவர் அதே பாம்பால் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தென் சீனாவில் உள்ள Jiangxi மாகாணத்தில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.





ஜியாங்க்ஸி மாகாணத்தில் அமைந்துள்ள Fuzhou நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் குறித்த இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்த அந்த இளைஞர், பின்னர் கொடிய விஷப்பாம்புகளை காட்டி மிரட்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.


கொடிய விஷம் கொண்ட 3 பாம்புகளை குறித்த இளைஞர் அந்த ஹொட்டல் அறையில் மறைத்து வைத்திருந்துள்ளார். உறவுக்கு பின்னர் குளியலறைக்கு சென்ற அந்த இளைஞரை குளியல் தொட்டியில் வைத்து பாம்பு கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


ஆனால் அதை கண்டுகொள்ளாத அந்த இளைஞர் திரும்ப வந்து படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில் தூக்கத்திலேயே குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த அடுத்த நாள் பாதிக்கப்பட்ட இளம்பெண் பெற்றோருடன் பொலிசாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.

ஹொட்டலின் முதல் மாடியில் கொடிய விஷம் கொண்ட பாம்பை பார்க்க நேர்ந்த அதிகாரிகள், உடனடியாக பரிசோதனையில் ஈடுபட்ட நிலையிலேயே இளைஞர் மரணமடைந்த சம்பவம் தெரியவந்துள்ளது.


இதனையடுத்து 3 பாம்புகளையும் ஹொட்டல் அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு இரையான பெண்ணின் புகார் தொடர்பில் பொலிசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்வில் குறித்த இளைஞர் பாம்பு விஷம் தலைக்கேறியதால் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.