காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்த ஏலியன்? கமெராவில் சிக்கிய அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

572

 

கமெராவில் சிக்கிய  ஏலியன்?

ஏலியன் போன்ற உருவம் கொண்ட விசித்திர உயிரினம் ஒன்று காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்ததால், அது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது இருக்கும் உலகில் வானில் விசித்திரமாக ஏதேனும் பறந்தால், அது ஏலியனகாத் தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின்றன.

அது ஏன் விமானிகள் கூட, வானில் செல்லும் போது, தங்கள் விமானத்தை திடீரென்று ஏதோ ஒன்று அதிவேகமாக கடந்து சென்றது. அது வேற்றுகிரகாவசிகளா? என்பது எங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் ஆந்திரா மாநிலத்தில் விசித்திரமான உயிரினம் காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. அதன் தலையை பார்க்கும் போது ஏலியன் போன்று இருக்கிறது. ஆனால் அதன் உடலமைப்பை பார்த்தால் விலங்கு போன்று இருக்கிறது.

உண்மையில் இது விலங்குதானா? எங்கிருந்தது? இப்படி ஒரு உயிரனத்தை இதுவரை பார்த்ததே இல்லையே என்றும், ஒரு சிலர் இது ஏலியன் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இதைக் கண்டால் மிகவும் பயமாக இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.