வீங்கி கொண்டே சென்ற பெண்ணின் வயிறு : கர்ப்பமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள் : இறுதியில் பகீர் திருப்பம்!!

742

 

பெண்ணின் வயிறு

பிரித்தானியாவில் பெண்ணொருவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்த நிலையில் அவரின் வயிற்றில் பெரிய கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. வேல்ஸின் Swansea நகரை சேர்ந்தவர் கீலி பாவெல் (28). சாதாரண உடல் எடையுடம் இருந்த இவரின் எடை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

இதோடு கீலியின் வயிறும் வீங்க தொடங்கியது. இதையடுத்து மருத்துர்களிடம் சென்று பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் பின்னரும் வயிற்றின் வீக்கம் மிகவும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பயந்து போன கீலி மீண்டும் மருத்துவர்களை நாடியுள்ளார்.

அப்போது அவருக்கு அல்ட்ரா ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் அதன் முடிவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் கீலியின் வயிற்றில் 7 பிறந்த சிசுக்களின் எடையுள்ள கட்டி இருந்துள்ளது. அதாவது 25 கிலோ எடையுடைய கட்டி இருந்தது. இதையடுத்து 5 மணி நேர ஆப்ரேஷன் செய்யப்பட்டு கட்டியானது அகற்றப்பட்டது.

இது குறித்து கீலி கூறுகையில், என்னுடைய வயிறு வீங்க வீங்க, என்னால் உடைகளை கூட அணிய முடியவில்லை, மிகவும் கஷ்டப்பட்டேன். மிக பெரிய அளவிலான கட்டியை என் வயிற்றில் இருந்து எடுத்தார்கள். நான் மறுஜென்மம் எடுத்ததாகவே கருதுகிறேன் என கூறியுள்ளார்.