யாழ். வைத்தியசாலையில் பெண்களின் அட்டகாசம் : சினிமாவை மிஞ்சிய செயற்பாடு!!

623


யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் போன்று நடித்து இருவர் திருட்டில் ஈடுபட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



அங்கு பொருத்தப்பட்டிருந்த தன்னியக்க கமாரா மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து சத்திர சிகிச்சை கூடத்திற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.



விசேட வைத்தியர்கள் அணியும் ஆடைகளை அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கள் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



திருட்டில் ஈடுபட்டு போது அங்கிருந்தவர்களால் குறித்த பெண்கள் மடக்கி பிடிக்கப்பட்ட போதும், ஒரு பெண் தப்பிச் சென்றுள்ளார்.


பிடிப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வேளையில் அவரும் தப்பிச் சென்றுள்ளார்.

வெளியில் காத்திருந்த இளைஞனுடன் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.


இது குறித்து யாழ். பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னியக்க கமராவின் காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.