வவுனியா ஆசிரியர்கள் மூவருக்கு தேசிய சேவை மேன்மை விருதுகள் வழங்கி கௌரவிப்பு!!

605


அறநெறிக் கல்விக்கு தமது அர்ப்பணிப்பான சேவையை சிறப்பாகவும் நீண்ட காலமாகவும் செய்து வரும் அறநெறி ஆசிரியர்கள் 100 பேரிற்கும் இலங்கை நாட்டின் இந்துசமய அறநெறிக்கல்விக்கு உன்னதமான பங்களிப்பை சிறப்பாகவும் நீண்ட காலமாகவும் செய்து வரும் இந்துசமய அறநெறிப் பாடசாலைகள் 100 இற்கும் தேசிய சேவை மேன்மை விருதுகள் வழங்கி கௌரவிக்கும் தேசிய விருது வழங்கும் விழா நேற்றையதினம் பி.ப. 4 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் கொழும்பு 04 இல் வெகு விமரிசையாக நடைபெற்றது.



இதன் போது வவுனியா மாவட்டத்தில் மூன்று அறநெறி பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டதுடன் மூன்று ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த அறநெறி பாடசாலைக்கான விருதினை சிந்தாமணி பிள்ளையார் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அறநெறிப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் பெற்றுக்கொண்டதுடன் அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான விருதினை திருமதி கே.லோகவள்ளி (மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை) , திருமதி என்.சிவகங்கை (அரசடிப்பிள்ளையார் அறநெறிப்பாடசாலை) , திருமதி ஜெ.விஜிதா (விளாங்குலேஸ்வரர் அறநெறிப்பாடசாலை) பெற்றுக்கொண்டனர்.