நடிகை வனிதா விஜயகுமார்
சென்னை மாதவரம் வீட்டிற்குள் நுழைந்த வனிதா விஜயகுமார் மீண்டும் கைது செய்யப்பட்டு தனது சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெளியே வந்த இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் என்னை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
எனது தந்தையே என் மீது புகார் கொடுத்து என்னை ஊடகத்தின் மத்தியில் மானபங்கப்படுத்தி உள்ளார். என்னுடைய குழந்தைகள் கூட என்கூட இருக்கிறார்கள் அவர்களை பேத்தி என்று கூட பார்க்காமல் இப்படி ஒரு சித்திரவதை செய்கிறார்கள்.
எவ்வளவு முறை வீட்டிற்கு சென்றாலும் நாயை அடிப்பது போல் அடித்துத் துரத்துகிறார்கள்.தந்தை விஜயகுமார் சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும். அதேபோல் தனக்கும் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.