கிரிக்கெட் போட்டிகளில் நாணயத்துக்கு பதிலாக இனிமேல் பேட் சுண்டப்படும்!!

423


அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பாஷ் டி20 லீக் தொடரை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த தொடர் டிசம்பர் – ஜனவரி மாதம் நடைபெறும். 2018 -19 ஆண்டிற்கான தொடர் வருகிற 19 ஆம் திகதி தொடங்குகிறது.



கிரிக்கெட் போட்டியில் ஸ்டம்பிற்கு மேல் வைக்கப்படும் பெய்ல்ஸ் (Bails) மரக்கட்டையால் செய்யப்பட்டது. இதை வித்தியாசமாக காட்டுவதற்காக பிக் பாஷ் தொடரில், பெய்ல்ஸ் மீது பந்து மற்றும் எதாவது தாக்கினால் லைட் எரியும் வகையில் அறிமுகம் படுத்தப்பட்டது.

பின்காலத்தில் சர்வதேச போட்டியிலும் இந்த பெய்ல்ஸ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.



தற்போது போட்டி தொடங்கும்போது நாணயம் சுண்டப்படும். நாணய சுழற்சியை வெல்லும் அணி துடுப்பாட்டததை அல்லது பந்து வீச்சை தேர்வு செய்யும். இந்நிலையில் பிக் பாஷ், நாணயத்தை சுண்டுவதற்குப் பதிலாக துடுப்பாட்ட மட்டையை சுண்டுவதற்கு முடிவு செய்துள்ளது.



வருகிற 19 ஆம் திகதி முதல் போட்டியில் இந்த முறை அறிமுகப்படுத்த இருக்கிறது.


நாணயம் சுண்டப்படும் போது டெய்ல் விழுந்ததா? ஹெட் விழுந்ததா? என்பது ரசிகர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. இதனால் துடுப்பாட்ட மட்டையை சுண்ட முடிவு செய்துள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.