வவுனியாவில் சிறுவர்களுக்கான திறன்விருத்தி செயலமர்வு!!

405

சிறுவர்களுக்கான திறன்விருத்தி செயலமர்வு மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயகெனடியின் ஏற்பாட்டில் இன்று(11.12) வவுனியா மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்றது.

இதன்போது வீதி போக்குவரத்து, முதலுதவி, சிறுவர் பாதுகாப்பு, தலைமைத்துவம், சிறுவர் உரிமை, மகிழ்ச்சிகரமான விளையாட்டு, விஞ்ஞானத்தின் மகிமை போன்ற தலைப்பின் கீழ் சிறுவர்களிற்கான திறன்களை விருத்தி செய்வதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இ.முஹமட் ஹனீபா, மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் கிராம மட்டங்களில் உள்ள சிறுவர் கழகங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.