வவுனியாவில் அதிக பனிமூட்டம் : மக்கள் சிரமம்!!

309

வவுனியாவில் கடந்த காலத்தை விடவும் இன்று சற்று அதிக மனிமூட்டம் காணப்பட்டது. காலை 9 மணிவரையும் காணப்பட்ட கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பல நாட்களாக அதிக பனிமூட்டம் காணப்படுவதுடன் கடும் குளிரான காலநிலையும் நீடித்துச் செல்கின்றது. இன்றைய தினம் காலை 9 மணியாகியும் பிராதான வீதிகளில் அதிக பணிமூட்டம் காணப்பட்டது.

இதனால் அதிகாலையில் தமது கடமைகளுக்குச் செல்லும் வாகனச் சாரதிகள், அரச ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர் இன்றைய தினம் போக்குவரத்து பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.