வவுனியாவில் 70ஆவது ஆண்டு மனித உரிமைகள் தின நிகழ்வுகள்!!

306

வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று(13.12) சர்வதேச மனித உரிமைகள் தினம் 70ஆவது ஆண்டு நிறைவு விழா வவுனியா பிராந்திய மனித உரிமைகள் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் 70ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியா பம்பைமடு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களிடையே மனித உரிமைகள் என்பது பிறப்பிலிருந்து உருவாக்கப்படுகின்றனவா? அல்லது சலுகையிலிருந்து உருவாக்கப்படுகின்றனவா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் மற்றும் பீடாதிபதி பிரயோக விஞ்ஞானப்பீடம் சி.குகனேசன், வன்னிப்பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன, வவுனியா பிராந்திய காரியாலய சட்டத்தரணி ஆர்.எல்.வசந்தராஜா, பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பல்கலைக்கழக வளாக மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.