வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா!!

513


வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா இன்று(13.12) புளியங்குளம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம் .ஹனீபா பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.



புளியங்குளம் கிருஸ்ணன் கோவிலில் இருந்து பண்பாட்டு பேரணி ஆரம்பித்து விழா மண்டபம் வரை வந்திருந்தது. பண்பாட்டு பேரணியில் மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியும் தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் சமையல் உபகரணங்களும் மற்றுமோர் ஊர்தியில் கொண்டு வரப்பட்டதுடன் நாதஸ்வரக் குழுவினர், பொய்க்கால் குதிரையாட்டம், காவடி, கோலாட்டம் உட்பட பண்பாட்டு நிகழ்வுகளும் தமிழ் பெரியார்களை போன்று வேடமணிந்த சிறுவர்களும் பவணியை அலங்கரித்திருந்தது.

மாவீரன் பண்டாரவன்னியன் அரங்கில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மருதமுகில் நூலும் வெளியிடப்பட்டது.



வவுனியா வடக்கு பிரதேசத்தின் சமூக கலை கலாசார துறையில் பங்களிப்பு செய்தவர்களுக்கு சமூக நலனோம்பி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.