விடுதியில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி : காப்பாளர் தலைமறைவு!!

356

தூக்கில் தொங்கிய மாணவி

சென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகள் செண்பகவள்ளி (17). இவர் சென்னை மாதவரம் அருகே பால்பண்ணை பகுதியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வரும் செண்பகவள்ளி, நேற்று கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கியுள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது அறைக்கு திரும்பிய அவரது தோழி, செண்பகவள்ளி தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் கல்லூரி வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விடுதி காப்பாளர் திடீரென மாயமானதால், பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதற்கிடையில் மாணவி தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.