மைத்திரி – மகிந்த எடுத்த முக்கிய முடிவு : மனம் திறந்தார் மைத்திரி!!

296

கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம் கேட்டேன். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருடன் இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தின்போது மைத்திரி இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியுடன் பேசிவிட்டு பதில் தருவதாக சொன்னார்கள். ஆனால் இன்னமும் பதில் இல்லை. மறுபுறம் நீதிமன்ற வழக்குகள் தொடர்வதால் நாங்கள் எப்படி நடந்துகொள்வது என்று கட்சியுடன் பேசித் தீர்மானிக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச இன்று காலை என்னை சந்தித்து இந்த நெருக்கடி நிலைமை தொடரவிட்டு என்னை மேலும் சிக்கலுக்குள்ளாக்க விரும்பவில்லையென தெரிவித்து பதவி விலகுவதாக சொன்னார். நாங்கள் வேறல்ல, எதிர்க்கட்சியில் எங்களது கட்சி உட்காரும் என அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.