வவுனியாவில் கொடுத்த கடனை மீளப்பெற முடியாமையால் நஞ்சருந்திய இளைஞன்!!

663

நம்பிக்கையின் நிமித்தம் நண்பர் ஒருவருக்கு கொடுத்த பணத்தை குறித்த நண்பர் திரும்ப வழங்காமையால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா பண்டாரிகுளம் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞர் தனது நண்பர் ஒருவருக்கு குறிப்பிட்ட தொகை பணத்தை சில மாதங்களுக்கு முன்னர் கைமாற்றாக வழங்கியுள்ளார்.

அப்பணத்தை மீளத் தருமாறு கடந்த சில நாட்களாக கோரிவந்த நிலையில் பணத்தை கடனாக பெற்ற நண்பர் பணத்தை வழங்காது இழுதடிப்பு செய்துள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த பணம் கொடுத்த இளைஞன் நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் களைநாசினியை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.