மிகுந்த மன வேதனையில் மஹிந்த ராஜபக்ஷ!!

550

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்க மாற்றத்தினால் நிறைவேற்ற முடியாது போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். எனினும் வழியை ஏற்படுத்தும் அரசியல் பலமிக்க பாரிய அணியை உருவாக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் விசேட உரையை நிகழ்த்தும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிக்க நான் எந்த எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கவில்லை. முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுக்கும் போது ஜனாதிபதி இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக பிரதமர் பதவியில் இருந்து விலகி, புதிய அரசாங்கத்தை நியமிக்க ஜனாதிபதிக்கு இடமளித்தேன்.

அத்துடன் ஒரு வருடமும் மூன்று மாதங்களும் தாமதமாகியிருக்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்த வைப்பதே தமது பிரதான எதிர்கால இலக்கு எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.