தூக்குக் கயிற்றில் துடிதுடித்துக் கொண்டிருந்த தம்பதி : கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த தம்பி!!

324

தூக்குபோட்டு தற்கொலை

ஐதராபாத்தில் தம்பதியினர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதில் மனைவி சம்பவ இடத்தியிலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். ஐதராபாத் மாநிலம் சரூர் நகர் பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தோஷ். தீயணைப்பு துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜானி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகன் 18 மாதமான மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜானியின் சகோதரன் ராகேஷ், சந்தோஷ் எண்ணுக்கு நீண்ட நேரமாக போன் செய்துள்ளார். ஆனால் அவர் பதில் தெரிவிக்காததால், நேரடியாக வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். அப்பொழுது கூட அவர் கதவை திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

அங்கு அக்கா ராஜானி ஹால் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மறுபுறம் வீட்டின் அறையில் சந்தோஷ் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். உடனே கயிற்றை அறுத்து அவரை மீட்ட ராகேஷ், வேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் அறிந்து விரைந்த வந்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

ஆனால் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கைவில்லை எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தோஷ் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.