வவுனியாவில் பயிர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு!!

316


சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பயிர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு வவுனியா மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்று(16.12) நடைபெற்றது.

இதன் போது நெற்செய்கையில் நவீன தொழில்நுட்பம் ,சோளம் மற்றும் நெற்பயிர்களை தாக்குகின்ற புழுக்களைப் பற்றிய அறிமுகமும், அவற்றைக்கட்டுப்படுத்தலும் நஞ்சற்ற உணவின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் விவசாய போதனாசிரியர்களால் விவசாயிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.



நாம் பயிரிட்டு நாம் உண்போம் எனும் கருத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயிர்ச் செய்கையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.