வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த பெண் மரணம்!!

489

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த 5ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 75 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் செட்டிகுளம் தபால்நிலையத்திற்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வீதி வழியே மாடுகளை கலைத்துச்சென்ற வயோதிபப்பெண்ணை மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றபட்டார்.

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (16.12) அதிகாலை குறித்த பெண் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெரியசாமி செவனை என்ற மூதாட்டியே மரணமடைந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.