முப்பதாயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசியை திருடிய மூவருக்கு நேர்ந்த கதி!!

243


திருகோணமலை கிண்ணியாவில் முப்பதாயிரம் ரூபாய் பெருமதியான தொலைபேசியைத் திருடி வைத்திருந்த மூவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கிண்ணியா, இடிமன், சின்னக் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 26,36, மற்றும் 29 வயதுடைய மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



கிண்ணியா பகுதியிலுள்ள வீடொன்றினுள் முப்பதாயிரம் ரூபா பெருமதியான தொலைபேசியை இருவர் திருடி அதனை மற்றொரு சந்தேகநபரிடம் கொடுத்துள்ளார்கள்.



தொலைபேசி உரிமையாளர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய தொலைபேசியின் ரகசிய இலக்கங்களை பயன்படுத்தி சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபர்களை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.