மைத்திரி தலைமையிலான மத்திய குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

277


ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட எவருக்கும் அமைச்சு பதவி வழங்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



ஸ்ரீலங்கா சுந்தந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அந்த கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு இடம்பெற்றது.

இதன்போது சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்ட எவருக்கும் அமைச்சு பதவி வழங்க கூடாது என அதிரடி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.



மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்தும் அதிகாரம் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த விஜித் விஜயமுனி சொய்சா உள்ளிட்ட மூவர் இன்று அரசாங்க தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.