அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கும் மைத்திரி?

266

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிற்கு இம்முறை அமைச்சு பதவி எதனையும் வழங்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒக்டோரப் 26ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்து வந்த்தார்.

ஒரு கட்டத்தில் ஜனாதபதியை “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்ற ரீதியிலும் பொன்சேகா பேசியிருந்தார். இந்நிலையில், புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி எதனையும் பொன்சேகாவிற்கு வழங்க போவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கட்சி தாவி ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துகொண்டவர்களுக்கும் அமைச்சு பதவி வழங்கப்போவதில்லை என இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டில் நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

-தமிழ்வின்-