14 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

622


திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி நேற்றிரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஈச்சிலம்பற்று, இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த இராஜேஸ்வரன் ரோஜினி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரின் தாய் இரண்டாவது திருமணம் முடித்துள்ளதாகவும், தாயுடன் வளர்ந்து வந்த நிலையில் மனவுளைச்சல் காரணமாக இன்று இரவு வீட்டுக்குள் தூக்கில் தொங்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.



தாய் இரண்டாவது திருமணத்தின் பின்னர் தன்னை குறைவாக பார்ப்பதினால் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் என அயலவர்கள் குறிப்பிடுகின்றனர்.



இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.