சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட பலர் வெளிநாட்டில் கைது!!

261

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த 425 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது தொடர்பாக கோலாலம்பூர் பொலிஸ் தலைமை அதிகாரி செரி மஸ்லான் லசிம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இத்தேடுதல் நடவடிக்கையின் போது 728 வெளிநாட்டினர் பரிசோதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட 425 பேரில் 394 பேர் ஆண்களும் 31 பெண்களும் உள்ளங்கியுள்ளனர்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், இந்தோனேசியா, பாகிஸ்தான், நேபாளம், பிலிப்பைன்ஸ், சிம்பாவே, நைஜீரியா, மற்றும் உகாண்டாவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர.

கைது செய்யப்பட்ட 15 நைஜீரியர்களும், ஒரு உகாண்டா பெண்ணும் ஏழு மோசடி வழக்குளில் தொடர்புடையவர்கள் என நம்பப்படுவதாக பொலிஸ் தலைமை அதிகாரி செரி மஸ்லான் லசிம் தெரிவித்திருக்கிறார்.

இதில், முறையான ஆவணங்கள் இல்லாமை, அனுமதி காலத்தை கடந்து தங்கியிருந்தமை, அங்கீகரிக்கப்படாத அடையாள அட்டைகளை வைத்திருந்தமை உள்பட குடிவரவுச் சட்டத்தை மீறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் அனைவரும் விரைவில் நாடுகடத்தப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.