வவுனியாவில் நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் ஒளிவிழா நிகழ்வு!!

814

வவுனியாவில் நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் ஒளிவிழா நிகழ்வு இன்று (20.12) நாற்சதுர சுவிசேச சபையின் தலைமைப் போதகர் பி.என்.சேகர் தலைமையில் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

முயற்சி அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா சுகாதாரத் தொழிலாளர்களுக்காக ‘பசுமை தொழிலாளர் நலன்புரிச் சங்கம்’ வவுனியா நகரசபையின் உப தவிசாளர் க.குமாரசாமி மற்றும் செயலாளர் ஆர்.தயாபரன் ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் சுகாதாரத் தொழிலாளர்களின் குடும்பங்கள் கலந்துகொண்டு கலை நிகழ்வுகளையும் நடத்தியிருந்தனர்.

நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களுக்கான ஒளி விழா நிகழ்வில் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

ஒளிவிழா நிகழ்வில் வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன், பிரதேச செயலாளர் க.உதயராசா, முயற்சி அறக்கட்டளையின் ஸ்தாபகர் க.சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.