வவுனியா மாவட்ட செயலகத்தில் சுனாமி பேரலை அனர்த்தம் நினைவு கூரப்பட்டது!!

620

 

இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சுனாமி பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நிகழ்வு இன்று (26.12) காலை 9.30 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் சுனாமி அனர்த்தத்தின் போது கடற்கரைக்கு அலைகளை பார்வையிடச் சென்ற அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையிலேயே மரணமானவர்களின் தொகை அதிகரித்திருந்தது.

சுனாமி பேரலை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் காணப்படவில்லை. இதன் காரணமாக ஆற்றலுள்ளவர்கள் பலரை சுனாமி பேரனத்தத்தில் நாங்கள் இழந்துள்ளோம் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.சூரியராஜா, மற்றும் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.