அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த திருநங்கை அழகி யார் தெரியுமா?

584

 

திருநங்கை அழகி

சென்னையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்ட அழகுப் போட்டியில் திருநங்கை முதல் பரிசு வென்ற பின்னரே அவர் பெண் அல்ல, திருநங்கை என தெரியவந்துள்ளது.

சங்கமம் சாதனையாளர் விருது 2018 என்ற நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான விழிப்புஉணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் சிறப்பாக அலங்காரம் செய்ததாக அழகுக் கலை நிபுணர் நிரஞ்சனாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. நிரஞ்சனா கூறுகையில், முதலில் எனக்கு இந்தப் போட்டியில கலந்துக்கிற எண்ணமே இல்ல. ஏன்னா, என்னோட பொருளாதாரச் சூழலுக்குத் தகுந்த மாதிரி எந்த மொடலும் கிடைக்கவில்லை. பின்னர் நாம ஏன் இந்த வாய்ப்பை நழுவவிடணும், நம்மகிட்ட திறமை இருக்கு’னு தோணுச்சு.

போட்டிக்கான விதிமுறையில பெண்கள் மட்டுமே கலந்துக்கணும்னு இல்ல. அப்போதான் திருநங்கையான என் தோழி ஜீவாகிட்ட இது பத்திச் சொன்னேன். நான் ஒரு திருநங்கை. நான் எப்படி இதுல கலந்துக்க முடியும். நான் கலந்துக்கிட்டா உங்களால ஜெயிக்க முடியாது என சொன்னார். அதை நான் பார்த்துக்குறேன், நீங்க வாங்கன்னு சொல்லி அழைச்சுட்டுப் போனேன் என்ற வரை வழிமறித்து பேசினார் திருநங்கை ஜீவா.

அவர் கூறுகையில், ஆரம்பத்துலயே நான் நிரஞ்சனாகிட்ட சொன்னேன், நான் கொஞ்சம் கறுப்பானவ, பொண்ணுங்களை மாதிரி என் ஸ்கின் கிடையாது, நீங்க ரிஸ்க் எடுக்காதீங்க’னு சொன்னப்போகூட, என்னால முடியும் ஜீவா. பிரைடல் மேக் அப் போட்டா நீ ரொம்ப அழகா இருப்ப. நிச்சயமா சொல்றேன் நாமதான் வின் பண்ணுவோம்’னு நம்பிக்கையா சொன்னாங்க.

அங்க இருக்கிற யார்கிட்டயும் நீ ஒரு திருநங்கைனு சொல்ல வேண்டாம் என சொல்லிட்டாங்க. ஏதோ தைரியத்துல ஓ.கே சொல்லி காம்ப்படிஷன்ல கலந்துக்கிட்டாலும் மனசுல பயம் இருந்துட்டே இருந்துச்சு. ஆனா, மேக் அப் போட்டு முடிஞ்ச பிறகு என் கண்ணை என்னாலேயே நம்ப முடியலை. அப்படியே ஆடிப்போயிட்டேன். நிரஞ்சனா அவ்வளவு அழகா மேக் அப் போட்டு விட்டுருந்தாங்க.

இறுதியில் நான் ஜெயித்ததா சொன்னாங்க. அந்த நிமிஷம் உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போயிடுச்சு என கூறினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அதிகமா ஜீவாவை ரசிப்பதை பார்க்க முடிந்தது. எல்லா ஈவென்ட்டும் முடிந்து விருது கொடுக்கும்போது நிரஞ்சனாவையும் ஜீவாவையும் மேடைக்குக் கூப்பிட்டார்கள்.

விருதை கையில வாங்கினதுக்கு அப்புறம் தான் ஜீவா அழுதுகிட்டே, தான் ஒரு திருநங்கை என கூறினார். அதை கேட்ட அனைவரும் அப்படியே ஆச்சர்யப்பட்டதை பார்க்க முடிந்தது.