ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி அசத்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர்!!

387


மலிந்த புஷ்பகுமார



இலங்கையில் நடைபெற்ற முதல்தர போட்டியில், சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில் கொழும்பு கிரிக்கெட் கிளப் மற்றும் சரசென்ஸ் அணிகள் மோதின.



இதில் கொழும்பு கிரிக்கெட் கிளப் அணி, சரசென்ஸ் அணியின் வெற்றிக்கு 349 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது. அதன்படி களமிறங்கிய சரசென்ஸ் அணி மலிந்த புஷ்பகுமாரவின் மாயாஜால சுழலில் 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.




இதன்மூலம் 235 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு அபார வெற்றி பெற்றது. மலிந்த 37 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிரட்டினார்.


கொழும்பு அணி வீசிய ஓவர்களில் பாதி ஓவர்களை மலிந்த வீசினார். அதாவது கொழும்பு அணி மொத்தம் வீசிய 36.4 ஓவர்களில், மலிந்த 18.4 ஓவர்களை வீசினார். 31 வயதாகும் மலிந்த புஷ்பகுமார 123 முதல்தர போட்டிகளில் 715 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.