காதலன் வெறுத்ததால் 1.59 லட்சம் குறுஞ்செய்தியை அனுப்பிய காதலி : தொல்லை தாங்க முடியாமல் காதலன் எடுத்த முடிவு!!

527

 

காதலன் எடுத்த முடிவு

தன் காதலன் தன்னை வெறுத்ததால் அவருக்கு 1.59 லட்சம் எஸ் எம் எஸ்களை அனுப்பி லவ் டார்ச்சர் செய்த அமெரிக்க பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் டேட்டிங் ஆப் மூலம் காதலர்கள் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் வாழ்க்கையில் ஊடல் என்பது மிக முக்கியமான ஒரு தருணமாக பார்க்கப்படுகிறது. சேர்ந்திருக்கும் தம்பதிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டை போட்டு சில நாட்களோ, சில வாரங்களோ பிரிந்து இருந்து மீண்டும் சேரும் போது அவர்களுக்குள் உருவாகும் நெருக்கம் மேலும் அதிகமாகும்.

ஆனால் அந்த பிரிவு காலத்தை தாங்க முடியாத சிலர், சில பைத்தியக்கார தனங்களை செய்து அந்த பிரிவை நிரந்தரமாக மாற்றி விடுகின்றனர். அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜாக்குலின் அடஸ், இவருக்கும் இவரது காதலருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்த பிரிவை ஜாக்குலினால் தாங்க முடியவில்லை. இதனால் அவர் தனது மனதில் உள்ள ஆதங்கங்களை எல்லாம் ஒவ்வென்றாக தோன்ற தோன்ற தனது முன்னாள் காதலனுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பியுள்ளார்.

இந்த எஸ்எம்எஸ்களை படித்து அதற்கு எந்த வித பதிலும் அளிக்காமல் அவரது காதலர் இருந்துள்ளார். ஆதனல் மேலும் ஆத்திரமடைந்த ஜாக்குலின் தொடர்ந்து எஸ்எம்ஸ்களை அனுப்பி கொண்டே இருந்துள்ளார். இதனால் கடுப்பான ஜாக்குலினின் முன்னாள் காதலன் பொலிசிற்கு சென்று இந்த விவகாரம் குறித்து கூறியுள்ளார்.

அவர் அளித்த புகாரில் ஜாக்குலின் தன்னை தொந்தரவு செய்யும் வகையில் சுமார் 60 ஆயிரம் எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து பொலிசார் அவரது செல்போனை வாங்கி சோதனை செய்ததில் அவர் அவருக்கு சுமார் 1.59 லட்சம் எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளார்.

இந்த எஸ்எம்எஸ்கள் அனைத்தும் தன் காதலனிடம் ஜாக்குலின் தன்னை விட்டு பிரிந்தால் செத்து விடுவேன் என மிரட்டுவது, அவரை கொன்று விடுவேன் என மிரட்டுவது, தன்னுடன் மீண்டும் சேர வேண்டும் என கெஞ்சுவது என விதவிதமாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் ஜாக்குலின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். ஜாக்குலினும் அவரது காதலரும் ஒரு டேட்டிங் சைட் மூலம் சந்தித்தாகவும், அவர்கள் ஒரு முறை டேட் சென்றபோதே ஜாக்குலினிற்கு அவர் மீது காதல் ஏற்பட்டதாகவும் அடுத்த டேட்டிற்கு அவரது காதலர் ஜாக்குலினுடன் செல்ல விரும்பாததால் ஜாக்குலின் இதை செய்ததாக கூறப்படுகிறது.