வவுனியாவில் 8 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!!

290


வவுனியாவில் இருவேறு சம்பவங்களில் 8 கிலோ கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் மூன்று நபர்களை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.



கடந்த 7 ம் திகதி காலை வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ்நிலைய போதை தடுப்புபிரிவினர் யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பை ஒன்றில் மறைத்து வைக்கபட்டிருந்த 4கிலோ கேரள கஞ்சாவினை கைப்பற்றியதுடன் அதனை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் வாழைச்சேனை பகுதியை சேர்ந்த இருவரை கைதுசெய்தனர்.



அதேவேளை அன்றயதினம் இரவு யாழில் இருந்து தியத்தலாவை நோக்கிசென்ற பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்த பொலிசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது பை ஒன்றில் மறைத்துவைக்கபட்டிருந்த நிலையில் காணப்பட்ட 4 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியா மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த ஒருவரை கைதுசெய்ததாகவும் தெரிவித்தனர்.



கைதுசெய்யபட்டவர்கள் நீதிமன்றில் ஆயர்படுத்தபட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.