காதலிக்கு இப்படியொரு நிலையா : காதலனின் விபரீத முடிவு : கொழும்பில் நடந்த துயர சம்பவம்!!

282

கொழும்பில் பாடசாலை மாணவன் ஒருவரின் விபரீத செயற்பாடு தொடர்பில் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காதல் தொடர்பு காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொரளை பேஸ்லைன் வீதியில் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யேஷான் பிரபாத் பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகனின் மரணம் தொடர்பில் சாட்சியம் வழங்கிய தந்தை,

உயிரிழந்தவர் எனது மூத்த மகன். அவர் உயர்தரத்தில் கல்வி கற்கின்றார். கடந்த 6ஆம் திகதி நானும் மனைவியும் எனது மற்ற இரண்டு மகன்களும் வீட்டில் இருந்தோம். உயிரிழந்த மகன் மேல் மாடியில் இருந்தார். அவர் சற்று கோபமாக இருந்தமையினால் மனைவியிடம் மேலே சென்று பார்க்குமாறு கூறினேன்.

பின்னர் 8 மணியளவில் மகனை உணவருந்த அழைத்த போது உணவு வேண்டாம் என கூறிவிட்டு கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பியவுடன் மேல் மாடிக்கு சென்று விட்டார். மீண்டும் அவரது அறைக்கு சென்று பார்க்கும் போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்து விட்டார். மகனின் கையடக்க தொலைபேசிக்கு பல குறுந்தகவல் வந்திருந்தது. அதில் மாணவி ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் தான் இன்னும் 4 நாட்களில் உயிரிழந்து விடுவதாகவும், மகனையும் உயிரிழக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கு முன்னர் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய மகன் கழுத்தை வெட்டி அந்த பெண்ணுக்கு புகைப்படம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். மகனின் காதலை நாங்கள் விரும்பவில்லை. மகன் இரகசியமாக தான் காதலித்தார். பின்னரே அவர் இவ்வாறு தூக்கில் தொங்கியுள்ளார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் காதலி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நான் அவரை 4 மாதங்களாக காதலித்தேன். நாங்கள் கையடக்க தொலைபேசியில் தான் பேசினோம் அவர்களின் வீட்டவர்களை எங்களுக்கு தெரியும்.

எனக்கும் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்தது. நான் மருந்து எடுக்க செல்வதாக கூறிவிட்டு சென்றேன். எனக்கு வருத்தம் என அவருக்கு தெரியும். எனினும் எனது நோய் என்னவென்று இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.

எனினும் எனக்கும் எதுவும் ஆபத்தாகவிடும் என அச்சத்தில் அவர் இவ்வாறு செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.