சீமானுக்கு 5 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது : மகிழ்ச்சியில் குடும்பம்!!

649

 

சீமானுக்கு ஆண் குழந்தை

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீமான்-கயல்விழி திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

சீமான்-கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழின் முதல் எழுத்தான ‘அ’ பொறிக்கப்பட்ட டொலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து தர, அதை வாங்கி சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார்.

திருமணமாகி 5 அண்டுகள் ஆன நிலையில் சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கயல்விழிக்கு பிரசவம் நடந்தது. தாயும் சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமான் தந்தை ஆகியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் சந்தோஷத்தில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.