வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் உதவிகள்!!

571

 

கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினால் இன்றைய தினம் பல பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு சுவிஸ் மென்பந்து கரப்பந்து துடுப்பாட்ட சம்மேளனத்தின் நிதி அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அந்த வகையில் மு.பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையைச் சேர்ந்த 59 மாணவர்களுக்கும், குஞ்சுக்குளம் பண்டாரவன்னியன் வித்தியாலயத்தினைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கும், பெரியகுளம் அ.த.க பாடசாலையினைச்சேர்ந்த 44 மாணவர்களுக்கும், வ.கொல்லர் புளியங்குளம் ஸ்ரீ ராம கிருஷ்ண வித்தியாலயத்தினைச் சேர்ந்த 38 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் நிறுவனத்தின் உப தலைவர் T.நடராசா, இணைப்பாளர் வே.பிரேமானந்தன், நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.