வவுனியாவில் சஜித் பிரேமதாசவின் பிறந்ததினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கல்!!

551

 

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் 52 வது பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியாவில் இன்று (12.01) மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் கே.கே.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.

வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் எஸ்.சுரேஸ்குமாரின் ஏற்பாட்டில் ஓமந்தை வேப்பங்குளம் ஸ்ரீ சித்திவினாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டினைத் தொடர்ந்து அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் கெ.கலன்சூரிய, இன மத கட்சி பேதமின்றி எந்த மக்களுக்கு வீடுகள் இல்லையோ அந்த மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.

அத்துடன் ஓமந்தை பிரதேசத்தில் வீடில்லாத 247 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இலவச வீட்டுத்திட்டங்களை வழங்க வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்வில் ஐக்கிய தேசியக்கட்சியின் வவுனியா மாவட்ட பிரதான அமைப்பாளர் பி.ஏ.கருணாதாச, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபையின் உறுப்பினர் ஆர்.ஏ.அமலியா, வவுனியா நகரசபை உறுப்பினர் ஆர்.ஜானக மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.