வவுனியாவில் குளத்தில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி!!

731

 

இரு இளைஞர்கள் பலி

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று (15.01.2018) மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரப்பெரியகுளம் அருகே ஆறு இளைஞர்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் இரு இளைஞர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் 16 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.