வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் படுகாயம்!!

455


 

மோட்டார் சைக்கில் விபத்து



வவுனியா புகையிரநிலைய வீதியில் இன்று (16.01.2019) 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,





வவுனியா சைவப்பிரகாச கல்லூரி வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கில் புகையிரநிலைய வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் புகையிரநிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.


இவ் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.