கரும்பு காட்டில் மர்மமாக இறந்து கிடந்த 10 வயது சிறுமி : முதியவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!!

623


 

மர்மமாக இறந்து கிடந்த சிறுமி



திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டராம்பட்டு அருகே உள்ள தென்முடியனூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமார்.





இவர் தன்னுடைய மனைவி அன்புகுமாரி மற்றும் 8 வயது மகன் பிரபுவுடன் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார். அவருடைய 10 வயது மகள் கீதா, தனது சொந்த ஊரில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கி 5ம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கரும்பு காட்டில் கீதா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


சிறுமி என்ன காரத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த கணேசன் என்கிற 60 வயது முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.