தைப்பொங்கல் தினத்தில் இலங்கையில் நடந்த சோகம் : நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!!

748

 

நீரில் மூழ்கி 8 பேர் மரணம்

தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்த போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும், 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும், ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை, சங்கமித்த கடற்கரையில் நேற்று சுழிக்குள் சிக்குண்ட நால்வரை திருகோணமலை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்டவர்கள் அனைவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.