குடிக்க பணம் தர மறுத்த தந்தையை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற மகன்!!

335

 

தந்தையை கொன்ற மகன்

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மது குடிக்க பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம் தடந்தேறி உள்ளது. சேலம் மாவட்டத்தில் சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவரது மகன் செல்லக்கண்ணு கறிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் செல்லக்கண்ணு சண்டையிட்டு தனது மனைவியின் அம்மா வீட்டில் சென்றுள்ளார். இதனிடையே, அவ்வப்போது தந்தையை பார்க்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் செல்லகண்ணு. இந்நிலையில் அவர் தந்தையை பார்க்க வந்த இடத்தில் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து செய்துள்ளார்.

ஆனால் செல்லமுத்து பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த செல்லக்கண்ணு, வீட்டில் இருந்த ஆடு வெட்டும் கத்தியால் செல்லமுத்துவை குத்தி கொலை செய்துவிட்டு அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு வந்த பொலிசார் செல்லமுத்துவின் உடலை கை பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்ல கண்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.