வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!!

840

பிரித்தானியாவை தளமாககொண்டியங்கும்“ தமிழர் மருத்துவ அறிஞர்“ நிறுவனத்தின் வேல்ஸ் கிளையால் வவுனியா பொதுமருத்துவமனையின் குழந்தைகளிற்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான அதி நவீன மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கிவைக்கபட்டிருந்தது.

நிகழ்வில் வவுனியா வைத்தியசாலையின் உதவி அத்தியட்சகர் வைத்திய கலாநிதி செந்தூர்பதிராஜா, வைத்திய நிபுணர் ஜெயபாலன், தமிழர் மருத்துவ அறிஞர் நிறுவன உறுப்பினரான விபுலேந்திரன், தாதிய பரிபாலகர் மாலா அலோசியஸ், விடுதி சகோதரி உருத்திராதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த உபகரணங்கள் வைத்தியசாலையின் சேவையை மென்மேலும் மேம்படுத்தும் என உதவி அத்தியட்சகர் செந்தூர்பதிராஜா தெரிவித்தார்.