வவுனியாவில் மலையக மக்களின் சம்பள உயர்விற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!!

373

தோட்டத் தொழிலாளருக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கபடவேண்டும் என்ற நாடளாவிய போராட்டத்திற்கு ஆதரவளிப்பதோடு அப்போராட்டத்தில் அனைவரையும் பங்குகொண்டு போராட்டத்ததை வலுப்படுத்துமாறு கேட்டுகொள்கின்றோம் என சமூகநீதிக்கான வெகுஐன அமைப்பின் செயலர் சு.டொன்பொஸ்கோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

பல ஆண்டுகளாக சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தோட்டத் தொழிளாளர்கள் போராட்டங்களை முன்னனெடுத்திருந்தபோதும் அதில் சொற்ப உயர்வுதான் கிடைத்தது.

கூட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் கையாலாகாதனமும் தொழிற்சங்க பாராளுமன்ற அரசியல்வாதிகளின் சோரம்போகும் நிலையும் அவர்களின் சம்பள உயர்விற்கு குந்தகம் விளைவித்துள்ளன.

தொழிற்சங்க செயற்பாடுகளிற்கு அப்பால் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து 1000 ரூபாய் சம்பள உயர்விற்காக பலவகையான போராட்டங்களையும் நடாத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக மலையகத்திலும், கொழும்பிலும் பல்வேறு பொதுஅமைப்புகளும் முற்போக்கு அரசியற்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எனினும் தோட்டக் கம்பனிகள் 650 ரூபாக்கு மேல் வழங்கமுடியாது என தெரிவிக்கின்றன.

தொழிலாளர்களின் நலனுக்காக குரல்கொடுக்கவேண்டிய பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர், கம்பனி முதலாளிகளின் சார்பாக நின்று முதலாளிகள் கூறும் சம்மபளம் நியாயமானது என தெரிவித்துள்ளார்.

தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என தெரிவிக்கும் கம்பனி நிர்வாகம் நிர்வாகிகளிற்கு இலட்சகணக்கில் சம்பளங்களை வழங்குகின்றன.

நாளாந்தம் அதிகரித்துவரும் வாழ்கைசெலவு பொருட்களின் விலையேற்றம் என்பவற்றை கருத்தில் கொள்ளும் போது தொழிலாளர்களிள் கோரிக்கை நியாயமானது.

இக்கோரிக்கைக்கு ஆதரவாக எமது அமைப்பு கைகோர்கிறது. எனவே நாளையதினம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெறும் ஆர்பாட்டத்திற்குஅனைவரும் ஆதரவை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.