கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : 2 ஆண்டுகள் கழித்து பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்!!

318

 

பாம்பை பார்த்ததும் பேசிய அதிசயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமைப் பெண்ணுக்கு பேச்சு வந்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிடைமருதூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சுரேஷ் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவி ஹேமாவுக்கு பேச்சுவரவில்லை. இதனால் இவரின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்திருந்தார்.

மேலும் 2 ஆண்டுகளாக அவர் ஊமையாகவே இருந்துள்ளார். இந்நிலையில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஹேமாவுக்கு மீண்டும் பேச்சு வந்துள்ளது. பாம்பைபார்த்த அதிர்ச்சியில் அவருக்கு பேச்சு வந்துள்ளது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.