மதுபோதையில் தள்ளாடும் குரங்குகள் : மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!!

659

தமிழகத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் வீசப்படும் நிலையில்,அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன.

வேலூர் அண்ணாசாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமை தபால் நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், வருமான வரித்துறை அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகியன அருகருகே அமைந்துள்ளன.

அரசு அலுவலகங்களுக்கு மத்தியில் உள்ள காலி இடத்தை இரவு நேரத்தில் குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசி விடுகின்றனர். இதனால், அங்கு ஏராளமான மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்த மதுபாட்டில்களில் இருக்கும் சிறிதளவு மதுவை அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன. இதுபோன்று போதையில் சுற்றித்திரியும் குரங்குகள் அரசு அலுவலகங்களுக்கு நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி கடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.