தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல இளம் நடிகை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

473

தூக்கில் தொங்கிய இளம் நடிகை

இளம் நடிகை நாக ஜான்சி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. தெலுங்கு தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நாக ஜான்சி (21). இவர் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஜான்சியின் சகோதரர் இன்று காலை அவர் வீட்டு கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்து போது ஜான்சி தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.

இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜான்சியின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜான்சி எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். அதில், மன அழுத்தம் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன், வேறு யாரும் இதற்கு காரணம் கிடையாது. என் மூளை தான் என் எதிரி என எழுதியுள்ளார்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜான்சி தனது தூரத்து உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததும், காதலை அவர் குடும்பத்தார் ஏற்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக ஜான்சி மன அழுத்தத்தில் இருந்த நிலையிலேயே இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஜான்சியின் செல்போனை கைப்பற்றியுள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.