வவுனியா ஈரட்டை பரக்கும் மகாவித்தியாலய மாணவர்கள் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை இன்றைய தினம் மேற்கொண்டனர்.
பாடசாலையின் அதிபர் தலைமையில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றிருந்தது. இன்று காலை 10மணியளவில் ஈரட்டை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவிருந்து ஆரம்பித்த ஊர்வலம் ஏ9 வீதி வழியாக பாடசாலையை சென்றடைந்தது.
இவ் ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் , பொலிஸார், சுகாதார பரிசோதகர் ,சிவில் பாதுகாப்பு படையினர் போன்ற பலரும் கலந்து கொண்டனர். இதன் போது போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.