வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்!!

524

விபத்தில் ஒருவர் மரணம்

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மேசன் தொழிலாளி ஒருவர் மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்ற இலகுரக வாகனம் புளியங்குளம் முத்துமாரி நகருக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியால் திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்திருந்தார். அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் புளியங்குளம் முத்துமாரிநகரை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது. வான்சாரதி கைதுசெய்ய்யபட்டதுடன் புளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.