வைத்தியசாலையில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட வயோதிப தந்தை!!

648

பாணந்துறை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிப தந்தை ஒருவரை வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் துரத்தியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியிருப்பினும் வைத்தியசாலை அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வயோதிபர் பாணந்துறை வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள ATMஇற்கு அருகில் விழுந்து கிடந்துள்ளார்.

தலையில் ஏற்பட்ட நோய் மற்றும் முதுகில் ஏற்பட்ட வருத்தம் காரணமாக கடந்த 5ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினர் குறித்த தந்தையை இவ்வாறு வெளியே துரத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.